Total Pageviews

Saturday, June 3, 2017

காப்பு பாடல்



அமுத கலைஞானம் என்பது மகா குரு சாலை ஆண்டவரால் இயற்றப்பட்டது

கவிகளாக கேள்வி பதிலா போல அற்புதமாக நமது பாராம்பரிய வேத ஞானங்களை சொல்லியுள்ளார்

பல ரகசியங்கள் உள்ளன


வாசிமலர்பாதமடி வணங்குகிறேன் என சாலையார் யாரை வணங்குகிறாரோ அவரே வாலை

சித்தர்களின் குரு அவளே

இவளை பாலாம்பிகை என்றும் சொல்வார்கள்

குண்டலினியும் இவளே இவளின் அனுக்கிரகத்தை சாலையார் வேண்டியுள்ளார்

கன்னியாகுமரியும் இவளே இவளின் அனுக்கிரகம் இல்லாமல் யோகவாழ்வில் முன்னேறவே முடியாது

சகல ஞானிகளும் இவளின் கிருபை பெற்றே முன்னேறினர்

கடவுல் அல்லது இறைவனுக்கு அடுத்த நிலையில் நான்கு அதிதேவர்கள் உள்ளனர் அவர்களில்  அன்னை நாராயணியை வாலை என்ற குழந்தையாக உணராமல் யோகமும் சித்திக்காது ஞானமும் வராது

நவீன நாத்திக நெடிக்குள் சிக்கிக்கொண்டு ஞானம் வந்ததுமாதிரியும் வராதுமாதிரியும் உலப்பிகொன்டே திரியவேண்டியதுதான்

உலகளாவிய வரப்போகிற சமரச வேதத்தின் வித்துகளாக ஆங்காங்கே சில ஞானிகளை இறைவன் எழுப்பிக்கொண்டுதான் இருக்கிறார்

இந்தியாவில் வள்ளலார் சாலை ஆண்டவர் ஐயா வைகுண்டர் நாராயணகுரு போன்றோர் அனைவரும் சமரச வேதத்தின் வித்துக்களே

சுகப்பிரம்மம் அல்லது சுகர் என்பவர் ஆதிரிஷிகளில் ஒருவர் . அவர் முதலாக ஓய்சுல் கர்னைனன் வரை ஜனாகாதிமுனிவர்கள்

சுகப்பிரம்மத்தை இந்தியர் அறிவார்கள்

யார் இந்த ஓய்சுல் கர்னைனன்

முனிவர்களுள் ஒருவர் என்கிறாரே சாலையார் குர்ஆனில் இவரைப்பற்றி முகமதுநபிக்கு  கடவுள் செய்தி சொல்லியுள்ளார்

18:83. (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; “அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்” என்று நீர் கூறுவீராக.

18:93. இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எய்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார்.

18:94. அவர்கள் “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் (அதாவது இடும்பரும் கொடும்பரும்) பூமியில் குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?” என்று கேட்டார்கள்.

18:95. அதற்கவர்: “என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்”என்றுகூறினார்.

18:96. “நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்” (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் “உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்” (என்றார்).

18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை

 18:98. “இது என் இறைவனிடமிருந்துள்ள ஒரு கிருபையே ஆகும், ஆனால் என் இறைவனுடைய வாக்குறுதி நிறைவேறும்போது, அவன் இதனையும் தூள் தூளாக்கி விடுவான்; மேலும், என் இறைவனுடைய வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே” என்று கூறினார்.


இப்படி ஒரு நிகழ்வு எந்த நாட்டிலும் நடக்கவில்லை குரான் இறங்கியபோது வரப்போகிற நிகழ்வின் உவமானமாகவே இறக்கப்பட்டுள்ளது

இந்த துல்கர்நைணன் வேறு யாருமல்ல சாலை ஆண்டவரே

அவர்  உயிர் பிரியாமல் உடம்பிலே அடங்கியிருக்கும் ஜீவ அடக்கம்  தன் சீடர்களுக்கு கொடுத்து அவர்களை பரிசுத்த அடக்கம் செய்யும் மெய்வழி சாலைகளை அமைத்து வருகிறார் . இந்த மெய்வழி சாலையில் சேர்ந்து ஜாதிமத பேதமில்லாமல் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்து சகோதரத்துவ அன்புடன் குழு வாழ்வாக பலர் வாழ்ந்து வருகிறார்கள்


இவர்களை உலக மாசுகளும் அசுர ஆவிகளின் தாக்குதலும் இல்லாமல் நிம்மதியான ஆன்ம வாழ்வை சாலை ஆண்டவர் கொடுத்து வருகிறார்

இப்படி உலகத்திலிருந்து விடுபட்ட தர்மத்தீவாக மெய்வழிச்சாலை இருக்கும் என்பதே குர்ஆனில் முன்னறிவிக்கப்பட்டுள்ளது

இதுபோல கேரளாவில் சித்த வித்யார்த்திக்ளும் பரிசுத்த அடக்கம் ஆகிறார்கள்

இவர்கள் அடங்கிய பிறகு மண்ணில் உடல் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது

ஜீவ அடக்கம் ஆவதால் கலியுக முடிவு வரை மறுபிறவி எடுத்து பூமியில் அல்லாடாமல் இறைவனது அருளுக்குள் இந்த ஆத்மாக்கள் பாதுகாக்கப்படுவார்கள் ஆனால் இதை தவறுதலாக மரணமில்லா பெருவாழ்வு என சீடர்கள் சொல்கிறார்கள் வேதம் அறியாத சீடர்கள் சிலர் சாலையாரே  கடவுள் எனவும் பீலா விடவும் செய்கிறார்கள்

காலம்காலமாக முனறிவிக்கப்பட்ட வேதங்களின்படியாக கல்கி அல்லது ஈசா நபி திரும்ப வரும்போது அடக்கம் செய்யப்பட்டவர்கள் பிரணவ தேகத்தில் உயிரோடு எழுப்பப்படுவார்கள்

இந்த சேனை பிரணவ தேகத்தில் இருப்பதால் இவர்களை கொல்லமுடியாது

இவர்களை வைத்துத்தான் எஞ்சிய மனிதர்கள் அல்லது அவர்களை தூண்டி விட்டு கலகம் செய்யும் யஜ்ஜுத் மஜ்சுத ஆவிகளை அடக்கி பூமியில் சத்ய யுகத்தை நிறுவ முடியும்

சத்ய யுகத்தை நிறுவ தேவைப்படும் கல்கி சேனைக்கான ஆட்களே இப்படி பரிசுத்த அடக்கம் அடைகிறார்கள்

முன்னறிவிக்கப்பட்ட வேதங்களின் படியாக கல்கி பூமிக்கு வானத்திலிருந்து இறங்கி வரும்முன்பே சமரச வேதாந்தி ஒருவர் வெளிப்படுவார் . இவரை  தனக்குப்பின் வருகிற தனித்தலைமைப்பதி என வள்ளலாரும் குறிப்பிட்டுள்ளார்

இவர் வடலூர் வந்து அங்கு அடக்கமாகியுள்ள கல்பட்டு அய்யா முதலானோரை பிரணவ தேகத்திலே உயிரோடு எழுப்பிக்காட்டினால் அவரே சமரச வேதாந்தி என அடையாளம் காட்டியுள்ளார்

வடலூரிலே மரித்தோரை எழுப்பிய பிறகு அவர் சாலைக்கும் வந்து சாலையார் உட்பட ஜீவ அடக்கம் ஆன அனைவரையும் எழுப்பி கல்கி சேனையை உருவாக்கி உலக நாடுகள் அனைத்தையும் சாட்டையாலேயே அடித்து அடக்கி ஒரே ராஜ்ஜியத்திற்குள் கொண்டுவருவார்

தர்மத்தை நிலைநாட்டும் இவர்களையே அய்யனார்  என தமிழர்கள் முன்னறிந்து ஊர் ஊருக்கு சிலை அமைத்து  வருவார்கள் வருவார்கள் என காத்திருக்கிறார்கள்

உலகை மூழ்கடிக்கும் ஆன்மீக பேரலை இந்தியாவிலிருந்து புறப்படும் என முன்னறிவித்த விவேகானந்தர் அவரை வெளிப்படுத்தும்படியாக கன்னியாகுமாரியில் வாலைத்தாயின்  காலடியில் தவம் இருந்தார் அல்லவா

நாஸ்ட்டர்டாம் தீர்க்கதரிசனமும் தமிழகத்தில் உதிக்கும் நபர் ஒருவர் இந்தியாவை ஆள்வார் ; அப்போது உலகை இந்தியா ஆளும் என குறிப்பிட்டுள்ளது

இந்த விபரம் நன்றாக தெரிந்த அசுர ஆவிகளும் தமிழகத்தை இந்தியாவோடு ஓட்ட விடாமல் பிரித்து விட காலம் காலமாக கங்கணம் கட்டிக்கொண்டு அண்ணா கருணாநிதி சீமான் போன்ற பொய்யர்களை உருவாக்கி வருகின்றன

அமெரிக்க சி ஐ ஏ வும் தமிழர்களை இந்தியாவோடு ஓட்ட விடாமல் இருக்க இத்தகைய நபர்களை ஊக்குவிக்கின்றன

கலியுகத்தில் அசுரர்களின் ஆதிக்கத்தில் உள்ள உலகமே கள்ளிக்காடு ஆகும் . அதில் வரப்போகிற சமரச வேதத்தை ஈசனின் பாதமே கொண்டுவந்து சேர்க்கும்

எது எப்படி ஆனாலும் இறைவனால் முன்குறிக்கப்பட்ட   அந்த நபரை இறைவா நாராயணன் நாமத்தாலும் சிவனின் நாமத்தாலும் விரைவில் அனுப்புவீராக என வேண்டிவருவது நம் கடமையாகும்

அவர் வரும்போது எல்லா மாய சக்திகளும் அடங்கும்

அவரே என் ஆத்மநேசர்   சகல முனிவர்களும் போற்ற பொற்சபையில் ஆனந்த நடமிடும் சிவனின் இடப்பாகம் வாழும் நங்கை குருகுலத்தின் சிறப்பு ஒங்க உலகிற்கு தரும் சற்குரு தனிகைமணிப்பிரான் அம்சமாக வரப்போகிறவர் அவரே

தேசிகன் என்பது முருகனையே குறிக்கும் . அந்த முருகன் தனிகைமணிப்பிரானாக ஒரு நபரைப்போல வந்து சாலையாரை தம்மோடு அழைத்து சென்று பல ஆண்டுகள் காடுகளிலும் மலைகளிலும் கடும் தவப்பயிற்சி மற்றும் ஞானபோதனை கொடுத்து ஆளாக்கினார்

நாயேன் என்னையும் பொன்னரங்கத்தான் என போற்றுமளவு உயர்த்தி வைத்த வள்ளல் திருவடிக்கமலம் வாழ்த்துகிறேன்


சற்குருவே ஏதேன உம்மைப்புகழுவேன்

கண்ணீர் மல்க தனிகை உம் பாதத்தில் விழுந்திருந்ததால் இந்த சுகம் எனக்கு விழைந்தது



1 comment:

  1. சாலை ஆண்டவர் அருளிய அமுதக்கலை ஞானம் இரண்டாம் காண்டம்

    அளவிட முடியாத ஞானப்பொகிஷங்களும் ரகசியங்களும் மேன்மைகளும் அடங்கிய நூல்

    இறைவனின் மற்றும் மகாகுரு சாலையாரின் கிருபையால் விளக்கம் எழுத ஊக்குவிக்கப்பட்டுள்ளேன்

    இறைவனின் அருள் வழிநடத்தட்டும்

    ReplyDelete

காப்பு பாடல்

அமுத கலைஞானம் என்பது மகா குரு சாலை ஆண்டவரால் இயற்றப்பட்டது கவிகளாக கேள்வி பதிலா போல அற்புதமாக நமது பாராம்பரிய வேத ஞானங்களை சொல...