சாலை ஆண்டவர் அருளிய இல்லம் என்பதற்கான விளக்கம்
கண்ணால் காணும் நாற்றம் பிடித்த உடம்பிற்குள்ளே அழிவில்லாத உடம்பு உன் ஆத்மா என்றறிக
யுகம் யுகமாக எத்தனை பிறவி எடுத்தாயோ அத்தனை பிறவியிலும் நீயாகிய இல்லம் அது
அதுவே நீ படைக்கப்பட்டபோது ஆன்மா லயித்த ஆலயம் ஆகும்
இறைவனின் சாயலான மனித நற்குணங்கள் இருக்கும் மனையாகும்
உன்னுள் லயித்தால் உணரக்கூடிய மெய்ஞானம் இருந்த வீடு
ஆன்மாவில் லயித்து ஆலயம் ஆனால் இறைவனையே உன்னுள் காண்பாய்
ஆதியில் முதல் மனிதனாகிய சிவன் படைக்கப்பட்டபோது இறைவனுக்கு இணையானவன் (ஆதம் என்றால் இறைவனுக்கு இணையானவன் ) என்ற அழகு ஒளிரும் நாமம் உனக்கும் உண்டு
உடலெடுத்த பலன் ஒங்க ஜெனன பிணி நீங்க ஆத்மாவாகிய இல்லத்தை அறமுள்ளதாக ஆக்குவது இல்லறமாகும்



அண்ணா தயவு செய்து சாலை ஆண்டவர்களின் அமுதக் கலை ஞானபோத நூல் விளக்கத்தை நிப்பாட்டும்படி உங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
ReplyDelete