துறவறம் எதுவென சாலையார் கூறுகிறார்
சதா சலிக்காமல் உலகத்தை தொடர்புகொண்டு அதை அனுபவிக்கும் இயல்புள்ளது மனிதனது ஐம்புலன்கள்
மரணிக்கும் தருவாயில் கூட அனுபவிக்க துடிக்கும் நிறைவேறாத ஏக்கத்தோடு பல ஆத்மாக்கள் மரணித்து மறுபிறவிக்கு செல்ல முடியாமல் அலைவதும் உண்டு
புலன்களின் பின்னால் ஓடும் ஆத்மாக்கள் பல உலகத்தில் வாழ்ந்த காலத்தில் நுகர்ச்சிக்காக தவதாயப்பட்டு பல பாவங்களுக்கு இலக்கானதும் அல்லாமல் இறந்த பின்னும் நிறைவாக அடுத்த பிறவியை நோக்கி செல்லாமல் அப்பிறவியின் தொடர்புள்ளவர்களையே சுற்றிசுழன்று சந்ததியாரின் வாழ்வையும் கெடுத்துக்கொண்டு இருப்பாரும் உண்டு
தன்னை உணர்ந்து தன்னையே ஒடுக்கும் ஆன்மீகர்களோ தன் முதல் எதிரிகள் தனது ஐம்புலன்களே என்பதை அறிவர்
உலகத்தோடு யுத்தம் செய்வதை விடுத்து தன்னோடு உத்தம் செய்கிறவனே ஞானியாவான்
அந்த யுத்தத்தில் தனது உயிர் என்னும் காவி ஏறி புலன்களை அடக்குகிறவனே துறவி
சதா வெளியே பாய்ந்து ஓடும் ஐம்புலன்களின் கதவை உள்ளிருந்து தாளிட்டுக்கொள்கிறான்
அவன் அறிவால் உலகை கவணிக்கிறான் அவைகளின் பின்னால் புலன்கள் ஓடுவதற்கு அனுமதிப்பதில்லை அதாவது மனம் தன்னிச்சையாக இயங்குவதில்லை
அறிந்ததோடு சரி மனம் இயங்க அனுமதிப்பதில்லை
அவன் அறிவு அனுமதித்தால் அவனது மனமும் புலன்களும் ஒரு விசத்தில் இயங்குகிறது
அவன் விரும்பாத விசயத்தில் அருகில் இருக்கும் பொருள் ஒன்றை அவன் கவணிக்காதது போல அவனது புலன்கள் உள்தாளிப்படுகின்றன அதனால் அவன் மனம் இயங்குவதில்லை
மனதின் இயக்கமே ஒரு மனிதனின் சக்தி செலவாவதற்கு காரணம்
தேவைப்பட்டால் அவன் மனம் இயங்கும் தேவைப்பட்டால் அவன் மனம் ஓடுங்கிவிடும்
ஞானியின் மனம் ஆமையைப்போன்றது
விரும்பினால் ஐம்புலன்களை விரித்து உலகில் இயங்கும் தேவைப்பட்டால் அவயங்களை உள்ளிழுத்து தாளிட்டுக்கொண்டு எதனாலும் பாதிக்கப்படாமல் ஒடுங்கிக்கொள்கிறான்
மனம் வெளியே தாவிச்செல்லாதபடி எதிலாவது போய் ஒடுங்கவேண்டுமல்லவா ?
அது எது என்றால் முதலாவது அவனவனது ஆத்மாவே ஆகும்
தனக்குள் தானே ஒடுங்கி நிம்மதியடைகிறான் யோகி
தனக்குள்தானே ஒடுங்கி ஆவிமண்டல சக்திகள் எதனாலும் புற உலகம் எதனாலும் பாதிப்புகள் இல்லாத கோட்டையாக தனது ஆத்மா இருப்பதை ஞானி அனுபவத்தில் அறிவான்
அவ்வாறு ஒடுங்கியவன் புற உலகத்திற்கும் தனக்கும் ஒரு கதவை அடைத்துக்கொள்கிறான் என்கிறார் சாலையார்
இதனால் வரும் மற்றோர் பலன் என்ன ?
அடங்காத மனம் அடங்கினால் அதனால் விரையமாகாமல் சக்தி சேமிப்படையும் உள்ளொளி வளர்ந்து பொங்கும்
அது எதுவென்றால் மனிதனில் இயங்கும் வாசியே ஆகும்
அந்த வாசி பொங்கி எழுந்து உச்சந்தலையை தானாகவே அடையும்
வாசி யோகம் என்கிற பெயரில் அதை ஒரு தொழில்நுட்பமாக மனிதர்கள் சிலர் பயிற்சிக்கிரார்கள்
மூச்சை இழுத்து அடக்கி வெளியேற்றி என பயிற்சியால் அந்த வாசியின் தொடர்பை அவர்கள் பெருக்க முயற்சிக்கிறார்கள்
பாத்தியிலே எவ்வளவுதான் தண்ணீர் பாய்ச்சினாலும் நண்டு வளையிருந்தால் தண்ணீர் தேங்காது ஓடுக்கொண்டே இருப்பதைப்போல வாசி யோகிகளின் முயற்சிகள் எல்லாம் அவர்களின் மனதின் அலைச்சலினால் வழிந்தோடி விடும்
தன்னை தானே உணராதவனும் தன் புலன்களை அடக்கி அறியாதவனும் செய்கிற வாசி யோகத்தால் கொஞ்சம் ருசி பார்ப்பானே தவிர முன்னேற்றம் அடைவதில்லை
ஆனால் மனதை ஆத்மாவில் ஒடுக்கி பழகியவன் கொஞ்ச நேரம் ஒடுங்கி இருந்தாலே போதும் மூலாதார கனல் பொங்கி பெருகி உச்சியை எட்டும்
உலகையும் அண்டத்தையும் படைத்த வித்து எதுவோ அந்த வித்தாகிய முற்றுயிரின் கனல் எதுவோ அதவே சிற்றுயிராகிய உன் உயிரில் உள்ள கனலுமாகும்
அதன் சக்தி விரையமாகாது உனது மனம் ஆத்மாவில் ஒடுங்குமானால் அந்தக்கனல் மிகுந்து எழும்பி துரியத்தில் நிற்கும் அதாவது வாசி துரியத்தில் நிற்கும்
துரியத்தில் வாசி நின்று அண்டத்தின் வாசியோடு கலந்து விளையாடும்போது உன் சரீரம் உன் மீது ஆதிக்கம் செய்யமுடியாது அடங்கி விடும் சரீரத்தின் உணர்வுகள் ஒடுங்கி விடும்
பிண்டத்தின் வாசி அண்டத்தின் வாசியோடு கலந்து விளையாடுவதால் ஆவிமண்டலத்தொடு தொடர்புகள் அதிகரிக்கும்
அத்தகையவன் ராஜாவாக இருந்தால் ராஜரிஷியாகவும் ; யுத்தகளத்தில் இருந்தால் நிஸ்காமிய கர்மியாகவும் : வியாபாரியாக இருந்தாலும் கர்மயோகியாகவும் ; இளவயது மனைவியோடு காமத்தை அளவு முறையோடு துய்த்து நற்சந்ததியை வளர்க்கிரவனாகவும் இருப்பானே தவிர உலகம் அவனை ஆளுகை செய்யாது
அவன் உலகில் இருப்பானே தவிர அவனுள் உலகத்தால் புகுந்து நிலைக்கமுடியாது
அவ்வாறு தனக்குள்ளிருந்து உலகை துறக்கிரவனே துறவி
புளியம் பழம் எவ்வாறு தனது ஓட்டை விட்டு தன்னைத்துண்டித்து கொண்டு ஒட்டாமல் இருக்கிறதோ அதைப்போல உலகில் இருந்தாலும் உலகத்தோடு ஒட்டாமல் தனித்தவனாகவும் விளித்தவனாகவும் இருப்பான்
துறவு அறத்தில் இருப்பவன்


No comments:
Post a Comment