திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பவரை பிரம்மச்சாரி என கூறிக்கொண்டிருக்கிறோம்
ஆனால் சாலையார் சொல்கிறார் ஆண் பெண் கலவியைத்தவிர்ப்பதற்கும் பிரம்மச்சாரி என்பதற்கும் எங்காவது பொருத்தம் உள்ளதா இல்லை
பிரம்மத்தில் பரமண்டலத்தில் சஞ்சரிக்கிரவனே பிரம்மச்சாரி
பூலோகத்தில் குரு ஒருவரை அடைந்தவனாக ஒருவன் இருப்பது பரலோக வாழ்விற்கு முதல் படி
அந்த குரு பரலோக சஞ்சாரியாக இருக்கவேண்டும்
நித்தியா கயிலாயவாசி என்றெல்லாம் ஏன் பட்டம் போட்டுக்கொள்கிறார்கள்
பட்டம் போட்டுக்கொண்டால் கயிலாய வாசியாகி விடமுடியுமா
பின்னும் ஏன் போட்டுக்கொள்கிறார்கள் என்றால் இந்த குரு பட்டம் போட்டுக்கொள்வதை நாம் ஏன் இலக்காக வைத்து பரலோகவாசியாக முயற்சிக்கக்கூடாது என சீடர்களுக்கு உள்ளுணர்வு வராதா என்பதற்காகத்தான்
அப்படி பரலோக சஞ்சாரம் ஆவி மண்டல அனுபவம் வேண்டுமானால் அப்படி அனுபவமுள்ள மெய்குருபிறான் ஒருவரை நாடி தேடி கண்டடைய வேண்டும்
அவர் உயிரோடு பூமியில் இயங்கிக்கொண்டிருந்தால் மட்டுமே அவரின் அனுபவத்தால் பரலோக வாசனை அவர் மூலமாக உனக்கும் கிட்டும்
அந்த வாசனையை முகர்ந்தால்மட்டுமே உலகம் உன் மீது திணிக்கும் பலவகையான பாச வாசனைகளிளிருந்து உன்னால் தப்பிக்க முடியும்
உலகம் எப்போதும் நீ மேல்நோக்கி உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக உன்னை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும்
மனைவி மக்கள் உறவினர் நண்பர்கள் குருமார்க்கம் இயக்கங்கள் என பலவகையான பாசவலைகள் அவர்களைப்பற்றி மட்டுமே உன்னை சிந்திக்கவைப்பார்கள்
இறைவனைப்பற்றி அவரின் பரமண்டல நபர்கள் தேவர்கள் அசுரர்கள் செயல்பாடுகளைப்பற்றி அறிந்துணர விடமாட்டார்கள்
குஞ்சு வளர்ந்தவுடன் ஓட்டை உடைத்தாக வேண்டும்
அப்படித்தான் ஒரு குருகுலத்தில் நீ வளர்ந்து தேறினால் அவர்களை விட்டு கடந்து அடுத்த படியை நோக்கி நீ தேடியாக வேண்டும்
ஆனால் எல்லோரும் எல் கே ஜி யிலேயே சவ்கரியமாய் புகழ் பாடிக்கொண்டிருங்கள் என்றே பிடித்து கொள்வார்கள்
நாமும் வருடக்கணக்கில் எல் கே ஜி யில் சவ்கரியமாய் இருப்பதையே விரும்புகிறோம்
ஏன் வளரவில்லை என்று கேட்டுக்கொள்வதில்லை
அதற்கு நாம் வைத்திருக்கும் சாக்கு நான் வளராமல் இருக்கலாம் ஏன் குரு மிக வளர்ந்தவர் உயர்ந்தவர் அவரையே என்னும் அடையமுடியவில்லை
பிறகெங்கு இன்னும் வளர்ந்து போவது
ஏன் குரு பெரியவர் ஆஹா ஓஹோ என பெருமை பாடிக்கொண்டே காலம் கடத்தி விடுகிறேன் என்பதாகும்
குருவின் பாச வாசனைகளை கற்றுக்கொண்டு கை மாற்றி இன்னும் மேம்பாடான குருவை தேடிக்கொண்டிருக்கும் தாகம் உன்னுள் ஒளிர்ந்துகொண்டே இருக்க வேண்டும்
அந்த அடங்காத தாகம் இறைவனை ருசி பார்க்கவேண்டும் என்ற தாகமாக இருக்கவேண்டும்
இறைவனைக்குரித்த தாகத்தை பலர் தாழ்வு மனப்பாண்மையால் கைவிட்டு விடுகிறார்கள்
உன் சரீரத்தில் ஆத்மாவில் உள்ள பாசவாசனைகளை ஒவ்வொன்றாக கடந்து செல்லும்போது உன் சத்சங்க குழுவும் மாறும்
உன் உள்தகுதி வளர்ச்சியுற்றால் அதற்கேற்ப புதிய சத்சங்கம் உன்னை வந்தடையும்
ஒரே கூட்டத்தில் நீ செம்படித்துக்கொண்டிருந்தால் உன் தகுதி ஒரு தம்பிடி கூட முன்னேறவில்லை என்றே அர்த்தமாகும்
முன்னேற்றம் என்பது குடிசையை மாற்றி உயரும் கவனரச குளிகை சித்தித்தால் மட்டுமே சாத்தியம்
குளிகை செய்தல் என்பது பெளதீகமாக என சிலர் முயற்சிக்கிறார்கள்
பறப்பதற்கு இரு குளிகை இருக்கிறது அதை பெற்று கையில் வைத்துக்கொண்டால் ககன மார்க்கமாக பயணம் போகலாம் என்கிறார்கள்
அப்படி பயணம் போனவர்கள் யாரும் அந்த குளிகை வைத்திருக்கவில்லை
நம் மனப்பான்மை அறிவு நிலை உயர உயர ஞானம் விளைய விளைய சித்திகள் இறைவனால் அருளப்பெரும்
அப்போது தானாகவே குண்டலினி வாசி துரியத்தில் ஏறி நின்று விளையாடும்
ஒரே ஒரு சின்ன சூத்திரம் சொல்கிறேன்
குண்டலினி மேலேம்பி மனிபூரகத்தை எட்டினால் ஆவிமண்டல தாக்குதல் உண்டாகும் அப்போது தீய ஆவிகள் கொஞ்ச நாள் உங்களை வாட்டிவதக்கி தடுமாறி சோர்வடைவதை தடுக்க இயலாது
அந்த அனுபவத்தில் நீங்கள் முட்டி மோதும்போதே தேவ ஆவிகள் உங்களை கைதூக்கி விட இறைவனால் அனுப்பப்பட்டு தேற்றம் அடைவீர்கள்
அந்த அனுபவம் வந்த பிறகே ஆவிமண்டலத்தில் தேவ ஆவி எது அசுர ஆவி எது தரம் பிரித்தறியும் நுழைபுலம் உண்டாகும்
ஆவிகளை பகுத்தறியும் ஞானம் ஆன்ம வாழ்வில் ஒரு மைல்கல்
ஓரிடத்தின் வழியாக நீங்கள் சென்றுகொண்டிருக்கும் போதே உங்களை சுற்றிலும் ஆவி மண்டலத்தில் மாற்றங்கள் உண்டாவதை நிதானித்துக்கொண்டும் சூழ்நிலைக்கேற்றவாறு பிரார்தித்துக்கொண்டும் இருந்தாக வேண்டும்
தியானத்தின் சித்திகளில் ஒன்றான உங்கள் பிரணவ தேகம் எல்லைஆரா அதிகரிக்க அதிகரிக்க உன் இயக்கம் பிரம்மத்தில் பாதிப்பை உண்டாக்கும்
உன்னைக்கொண்டு உலகில் ஆவிமண்டலத்தில் இறைவன் மாற்றங்களை செய்விப்பார்
அப்படி பிரம்மத்தில் உலவுகிரவனாக ஆனவனே பிரம்ம சாரி என்கிறார் சாலையார்


No comments:
Post a Comment