Total Pageviews

Saturday, June 3, 2017

பிரம்ம சாரி









திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பவரை பிரம்மச்சாரி என கூறிக்கொண்டிருக்கிறோம்

ஆனால் சாலையார் சொல்கிறார் ஆண் பெண் கலவியைத்தவிர்ப்பதற்கும்  பிரம்மச்சாரி என்பதற்கும் எங்காவது பொருத்தம் உள்ளதா இல்லை

பிரம்மத்தில் பரமண்டலத்தில் சஞ்சரிக்கிரவனே பிரம்மச்சாரி

பூலோகத்தில் குரு ஒருவரை அடைந்தவனாக ஒருவன் இருப்பது பரலோக வாழ்விற்கு முதல் படி

அந்த குரு பரலோக சஞ்சாரியாக இருக்கவேண்டும்

நித்தியா கயிலாயவாசி என்றெல்லாம் ஏன் பட்டம் போட்டுக்கொள்கிறார்கள்

பட்டம் போட்டுக்கொண்டால் கயிலாய வாசியாகி விடமுடியுமா

பின்னும் ஏன் போட்டுக்கொள்கிறார்கள் என்றால் இந்த குரு பட்டம் போட்டுக்கொள்வதை நாம் ஏன் இலக்காக வைத்து பரலோகவாசியாக முயற்சிக்கக்கூடாது என சீடர்களுக்கு உள்ளுணர்வு வராதா என்பதற்காகத்தான்

அப்படி பரலோக சஞ்சாரம் ஆவி மண்டல அனுபவம் வேண்டுமானால் அப்படி அனுபவமுள்ள மெய்குருபிறான் ஒருவரை நாடி தேடி கண்டடைய வேண்டும்

அவர் உயிரோடு பூமியில் இயங்கிக்கொண்டிருந்தால் மட்டுமே அவரின் அனுபவத்தால் பரலோக வாசனை அவர் மூலமாக உனக்கும் கிட்டும்

அந்த வாசனையை முகர்ந்தால்மட்டுமே உலகம் உன் மீது திணிக்கும் பலவகையான பாச வாசனைகளிளிருந்து உன்னால் தப்பிக்க முடியும்

உலகம் எப்போதும் நீ மேல்நோக்கி உயர்ந்து விடக்கூடாது என்பதற்காக உன்னை பிடித்து இழுத்துக்கொண்டே இருக்கும்

மனைவி மக்கள் உறவினர் நண்பர்கள் குருமார்க்கம் இயக்கங்கள் என பலவகையான பாசவலைகள் அவர்களைப்பற்றி மட்டுமே உன்னை சிந்திக்கவைப்பார்கள்

இறைவனைப்பற்றி அவரின் பரமண்டல நபர்கள் தேவர்கள் அசுரர்கள் செயல்பாடுகளைப்பற்றி அறிந்துணர விடமாட்டார்கள்

குஞ்சு வளர்ந்தவுடன் ஓட்டை உடைத்தாக வேண்டும்

அப்படித்தான் ஒரு குருகுலத்தில் நீ வளர்ந்து தேறினால் அவர்களை விட்டு கடந்து அடுத்த படியை நோக்கி நீ தேடியாக வேண்டும்

ஆனால் எல்லோரும் எல் கே ஜி யிலேயே சவ்கரியமாய் புகழ் பாடிக்கொண்டிருங்கள் என்றே பிடித்து கொள்வார்கள்

நாமும் வருடக்கணக்கில் எல் கே ஜி யில் சவ்கரியமாய் இருப்பதையே விரும்புகிறோம்

ஏன் வளரவில்லை என்று கேட்டுக்கொள்வதில்லை

அதற்கு நாம் வைத்திருக்கும் சாக்கு நான் வளராமல் இருக்கலாம் ஏன் குரு மிக வளர்ந்தவர் உயர்ந்தவர் அவரையே என்னும் அடையமுடியவில்லை

பிறகெங்கு இன்னும் வளர்ந்து போவது

ஏன் குரு பெரியவர் ஆஹா ஓஹோ என பெருமை பாடிக்கொண்டே காலம் கடத்தி விடுகிறேன் என்பதாகும்

குருவின் பாச வாசனைகளை கற்றுக்கொண்டு கை மாற்றி இன்னும் மேம்பாடான குருவை தேடிக்கொண்டிருக்கும் தாகம் உன்னுள் ஒளிர்ந்துகொண்டே இருக்க வேண்டும்

அந்த அடங்காத தாகம் இறைவனை ருசி பார்க்கவேண்டும் என்ற தாகமாக இருக்கவேண்டும்

இறைவனைக்குரித்த தாகத்தை பலர் தாழ்வு மனப்பாண்மையால் கைவிட்டு விடுகிறார்கள்

உன் சரீரத்தில் ஆத்மாவில் உள்ள பாசவாசனைகளை ஒவ்வொன்றாக கடந்து செல்லும்போது உன் சத்சங்க குழுவும் மாறும்

உன் உள்தகுதி வளர்ச்சியுற்றால் அதற்கேற்ப புதிய சத்சங்கம் உன்னை வந்தடையும்

ஒரே கூட்டத்தில் நீ செம்படித்துக்கொண்டிருந்தால் உன் தகுதி ஒரு தம்பிடி கூட முன்னேறவில்லை என்றே அர்த்தமாகும்

முன்னேற்றம் என்பது குடிசையை மாற்றி உயரும் கவனரச குளிகை சித்தித்தால் மட்டுமே சாத்தியம்

குளிகை செய்தல் என்பது பெளதீகமாக என சிலர் முயற்சிக்கிறார்கள்

பறப்பதற்கு இரு குளிகை இருக்கிறது அதை பெற்று கையில் வைத்துக்கொண்டால் ககன மார்க்கமாக பயணம் போகலாம் என்கிறார்கள்

அப்படி பயணம் போனவர்கள் யாரும் அந்த குளிகை வைத்திருக்கவில்லை

நம் மனப்பான்மை அறிவு நிலை உயர உயர ஞானம் விளைய விளைய சித்திகள் இறைவனால் அருளப்பெரும்

அப்போது தானாகவே குண்டலினி வாசி துரியத்தில் ஏறி நின்று விளையாடும்

ஒரே ஒரு சின்ன சூத்திரம் சொல்கிறேன்

குண்டலினி மேலேம்பி மனிபூரகத்தை எட்டினால் ஆவிமண்டல தாக்குதல் உண்டாகும் அப்போது தீய ஆவிகள் கொஞ்ச நாள் உங்களை வாட்டிவதக்கி தடுமாறி சோர்வடைவதை  தடுக்க இயலாது

அந்த அனுபவத்தில் நீங்கள் முட்டி மோதும்போதே தேவ ஆவிகள் உங்களை கைதூக்கி விட இறைவனால் அனுப்பப்பட்டு தேற்றம் அடைவீர்கள்

அந்த அனுபவம் வந்த பிறகே ஆவிமண்டலத்தில் தேவ ஆவி எது அசுர ஆவி எது தரம் பிரித்தறியும் நுழைபுலம் உண்டாகும்

ஆவிகளை பகுத்தறியும் ஞானம் ஆன்ம வாழ்வில் ஒரு மைல்கல்

ஓரிடத்தின் வழியாக நீங்கள் சென்றுகொண்டிருக்கும் போதே உங்களை சுற்றிலும் ஆவி மண்டலத்தில்  மாற்றங்கள் உண்டாவதை நிதானித்துக்கொண்டும் சூழ்நிலைக்கேற்றவாறு பிரார்தித்துக்கொண்டும் இருந்தாக வேண்டும்

தியானத்தின் சித்திகளில் ஒன்றான உங்கள் பிரணவ  தேகம்  எல்லைஆரா அதிகரிக்க அதிகரிக்க  உன் இயக்கம் பிரம்மத்தில் பாதிப்பை உண்டாக்கும்

உன்னைக்கொண்டு உலகில் ஆவிமண்டலத்தில் இறைவன் மாற்றங்களை செய்விப்பார்

அப்படி பிரம்மத்தில் உலவுகிரவனாக ஆனவனே பிரம்ம சாரி என்கிறார் சாலையார்



 

No comments:

Post a Comment

காப்பு பாடல்

அமுத கலைஞானம் என்பது மகா குரு சாலை ஆண்டவரால் இயற்றப்பட்டது கவிகளாக கேள்வி பதிலா போல அற்புதமாக நமது பாராம்பரிய வேத ஞானங்களை சொல...